For Daily Alerts
Just In
இலங்கை: ரணில் தலைமையிலான அரசின் 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு- 7 பேர் தமிழர்கள்!
கொழும்பு: இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசில் 7 தமிழர்கள் உட்பட 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது ஐக்கிய தேசியக் கட்சி. இக்கட்சி ஆட்சி அமைக்க இலங்கை சுதந்திர கட்சி ஆதரவளித்தது. இதனால் இலங்கையில் தேசிய அரசு அமைந்துள்ளது.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் செயலகத்தில் இன்று 42 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 7 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Sri Lanka's 42 Cabinet Ministers took oath at Presidential Secretariat.
Story first published: Friday, September 4, 2015, 14:48 [IST]