அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. இலங்கையில் பரபரப்பு.. கொழும்பில் ராணுவம் குவிப்பு!
இலங்கையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டுவெடித்த காரணத்தால் தற்போது தலைநகர் கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுவெடித்த காரணத்தால் தற்போது தலைநகர் கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இலங்கையில் நடந்த இறுதி போருக்கு பின் அந்நாட்டில் கொஞ்சம் அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று அங்கு ஆறு இடங்களில் குண்டுவெடித்து இருக்கிறது.
இன்று காலை மக்கள் தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை அடுத்து வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
சர்ச்
மொத்தம் 8 இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச்,மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. அனைத்தும்கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும். மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.
கொழும்பு குறி
இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது கொழும்பு என்பதுதான் மிக முக்கியமான விஷயம் ஆகும். சரியாக தலைநகரில் மிக முக்கியமான இடங்களில் இந்த குண்டுவெடித்துள்ளது. அதில் குண்டுவெடித்த 2 ஹோட்டல்கள் வெளிநாட்டு மக்கள் அதிகம் தங்கி இருந்த 5 நட்சத்திர ஹோட்டல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக மோசம்
கொழும்பில் பத்து ஆண்டுகளுக்கு பின் நடக்கும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதல் ஆகும் இது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிக்கப்பட்ட குண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
|
ராணுவம் குவிப்பு
இந்த தாக்குதல் காரணமாக கொழுப்பில் தற்போது மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பெரிய அளவில் ராணுவப்படை கொழும்பில் களமிறக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.