For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது மு.க. ஸ்டாலின் அறிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    இலங்கை: கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8 வது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என 7 இடங்களில் குண்டுவெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில், பரபரப்பு உச்சக்கட்டம் அடைந்துள்ளது.

    Blast in Sri Lanka,crushing the heart says Stalin

    ஈஸ்டர் தினத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர சம்பவத்திற்கு, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    StalinTweet: Blast in Sri Lanka,crushing the heart
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X