For Daily Alerts
Just In
கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை: இலங்கை அமைச்சர்
கொழும்பு: இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ளது.
நாளை உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அந்த நாட்டு அமைச்சர் மங்கள அமரவீர தெரிவித்துள்ளார்.
கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்வதாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை ராணுவம் சிறை பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு இலஹ்கை சிறைகளில் இப்போதுள்ள நிலவரப்படி 48 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
Comments
English summary
Srilanka to release 48 TN fishermen as Christmas gifts, says it's minister.