For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஐரோப்பிய யூனியன் ஈடுபட உள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

EU to observe Parliamentary Elections in Sri Lanka

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணியை ஐரோப்பிய யூனியன் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில் இலங்கை அரசின் வேண்டுகோளை ஐரோப்பிய யூனியன் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனையடுத்து 46 பேர் கொண்ட குழு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. இக்கண்காணிப்புக் குழுவில் கிறிஸ்டினா பிரேதா தலைமை தேர்தல் கண்காணிப்பாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Following an invitation from the Sri Lanka authorities, the European Union has started the deployment of an Election Observation Mission (EOM) to Sri Lanka to observe the Parliamentary Elections scheduled for 17 August 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X