For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரிய கைது-ராஜபக்சே உறவினர்!

நிதி மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரிய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய உறவினராவார்.

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தை ஜாலிய விக்ரமசூரிய தமது பணி காலத்தில் சீரமைத்தார். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் விடப்பட்டதில் 245,000 டாலர் கமிஷனாக பெற்றார் ஜாலிய விக்ரமசூரிய என்பது குற்றச்சாட்டு.

Former Srilanka's Ambassador to US Jaliya Wickramasuriya arrested

இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனால் விக்ரமசூரிய வெளிநாட்டுக்கு தப்பி செல்லவும் தடை விதிக்கப்ப்ட்டிருந்தது.

இதனிடையே நேற்று ஜாலிய விக்ரமசூரிய அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள விக்ரமசூரியவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Sri Lankan Ambassador to the US, Jaliya Wickramasuriya has been arrested by the Police Financial Crimes Investigation Division (FCID) over alleged misuse of state funds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X