For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியின் பிரசவத்திற்கு கள்ளக்காதலியை அழைத்து வந்த கணவருக்கு தர்ம அடி

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை கவனித்துக் கொள்ள கள்ளக்காதலியை அழைத்து வந்த நபரை உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

இலங்கையைச் சேர்ந்த திருமணமான ஆண் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான அவரின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Husband gets lover to look after pregnant wife

அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டும், உங்களின் மனைவியை கவனித்துக் கொள்ள யாராவது இங்கேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே அவர் தனது மனைவியிடம் தனக்கு தெரிந்த பெண்ணை உதவிக்கு அழைத்து வருவதாக கூறியுள்ளார்.

உதவி செய்ய வரப்போவது தனது கணவரின் கள்ளக்காதலி என அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர் தனது உடன்பிறப்புகளுக்கு போன் செய்தார். தகவல் கிடைத்த வேகத்தில் மருத்துவமனைக்கு வந்த உடன் பிறப்புகள் மச்சானுக்காக காத்திருந்தனர்.

மச்சானுடன் மருத்துவமனைக்கு வந்த பெண்ணை விசாரித்ததில் கள்ளத்தொடர்பு பற்றிய அனைத்தையும் அவர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து மனைவியின் உடன்பிறப்புகள் மச்சானை நையப் புடைத்தனர்.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அறிவுரை வழங்கி அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

English summary
A man who took his paramour to take care of his pregnant wife at hospital was beaten up by relatives in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X