For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்.. கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய வீரர்கள் நிலை?

கொழும்பில் இன்று இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் முதல் டி-20 போட்டி நடக்க இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிங்கள பவுத்த பிக்குகளின் வன்முறையால் பற்றி எரியும் இலங்கை- வீடியோ

    கொழும்பு: கொழும்பில் இன்று இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் முதல் டி-20 போட்டி நடக்க இருக்கிறது. இலங்கையில் கலவரம் நடந்து வரும் நிலையில் இந்த போட்டி நடக்குமா என்று கேள்வி எழும்பி இருக்கிறது.

    நீண்ட நாட்களுக்கு பின்பு இலங்கையில் மீண்டும் புத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்களுக்கும் அங்கு இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. தமிழர்களுக்கும், சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை போலவே இதுவே பெரிய வரலாறு கொண்டது ஆகும்.

    இன்னும் இரண்டு வாரங்கள் அங்கு போட்டி நடக்க இருக்கிறது. இதனால் பாதுகாப்பு குறித்த கேள்வி எழும்பி இருக்கிறது.

    பெரிய

    இஸ்லாமியர்கள் புத்தமத மக்களை மத மாற்றுவதாக கூறி சென்ற வாரம் கண்டியில் கலவரம் நடந்தது. கடந்த 27ஆம் தேதி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டு தலங்களில் தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் இரண்டு பேர் மரணம் அடைந்தார்கள்.

    அவசர நிலை

    தற்போது இதற்கு இஸ்லாமியர்கள் எதிர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கு பெரிய கலவரம் உருவானது. கலவரத்தை தடுக்கும் வகையில் தற்போது அங்கு 10 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    போட்டி

    ஆனால் அங்கங்கே போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு இன்று நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் அவர்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழும்பி இருக்கிறது.

    பெரிய பாதுகாப்பு

    பெரிய பாதுகாப்பு

    இந்திய வீரர்களுக்கு இந்த போட்டியில் பெரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ராணுவம் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போட்டி கண்டிப்பாக நடக்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

    English summary
    Sri Lanka to declare a State Of Emergency for a period of 10 days after communal clashes “Gazette will be published today” says Minister S. B. Dissanayake. India wil play 1st T-20 match in Sri Lanka in worst riot scenario.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X