யாழ். பல்கலை. மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்!
2 தமிழ் மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம்: இலங்கை போலீசாரால் 2 மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர், ஆளுநர் அலுவலகங்களை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேரை இலங்கை போலீசார் சுட்டுப் படுகொலை செய்தனர். முதலில் அவர்கள் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
பின்னர் மாணவர்கள் போராட்டத்தால் உண்மை அம்பலமானது. இந்த படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் இன்று பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர்.
இதனால் யாழ் மாவட்டம் மற்றும் ஆளுநர் அலுவலக பணிகள் பாதிப்படைந்தன. மேலும் ஏ-9 நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிளிநொச்சியிலும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.