நிழல் அரசாங்கம்? மாஜி பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்களுடன் ராஜபக்சே ஆலோசனை!
இலங்கை: ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சே ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இரண்டு பிரதமர்கள், இரண்டு தலைமை நீதிபதிகள் என்கிற அலங்கோலமும் நடந்தேறியது.
தற்போது ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே தரப்பின் கை ஓங்கி இருப்பதாகவே கூறப்படுகிறது. ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாயவை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவைக்க அரசு தரப்பு மீது அதிருப்தியை ஏற்படுத்தவே இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
உங்களில் யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது.. ஈரான் பகீர் மிரட்டல்.. அமெரிக்காவுடன் மோதல்!
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்கள் ஆகியோருடன் ராஜபக்சே ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிக்கையாகவும் தாக்கல் செய்யவும் ராஜபக்சே 'மாஜி'க்களுக்கு உத்தரவும் பிறப்பித்திருக்கிறாராம்!
அடுத்த ஆட்டம் ஆரம்பம்!