For Daily Alerts
Just In
விடுதலைப் புலிகளின் தலைநகரில் ராஜபக்சேவை வெளுத்து வாங்கிய தமிழர்கள்!
கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கி வந்த கிளிநொச்சியில் ராஜபக்சேவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் தமிழர்கள். அங்கு அவருக்கு வெறும் 24 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
தமிழர் நகரமான கிளிநொச்சி வடக்கில் உள்ளது. முக்கியமான தமிழர் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக ஒரு காலத்தில் கோலோச்சி வந்தது. இன்று அந்த மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்று கூடி ராஜக்சேவை இழுத்து தெருவில் தள்ளியுள்ளனர்.
இந்த டிவிஷனில் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு 72.1 சதவீத வாக்குகளைத் தமிழர்கள் கொடுத்துள்ளனர். அதாவது 38,856 வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
அதேசமயம், ராஜபக்சேவுக்கு இங்கு வெறும் 13,300 வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது 24.7 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
Comments
English summary
Maithribala Srisena has wons the Kilinochchi polling division and Rajapakse was defeated badly in this erstwhile LTTE capital
Story first published: Friday, January 9, 2015, 9:03 [IST]