For Daily Alerts
Just In
இன மோதல்களால் ரணிலுக்கு எதிரான ராஜபக்சே கோஷ்டியின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைப்பு!
இன மோதல்கள் வெடித்துள்ள நிலையில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சிங்கள பவுத்த பிக்குகளின் வன்முறையால் பற்றி எரியும் இலங்கை- வீடியோ
கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பவுத்த பிக்குகளின் வன்முறை வெறியாட்டத்தால் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளாட்சி தேர்தல்களில் மகிந்த ராஜபக்சே அணி வென்றது. இதனால் சிங்களர் மத்தியில் ராஜபக்சேவுக்கு செல்வாக்கு இருக்கிறது என கொக்கரித்தார்.
அதேநேரத்தில் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை அமைச்சரவையில் மாற்றங்களை செய்தார் பிரதமர் ரணில்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன மோதல்கள் வெடித்ததால் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பின்னர் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Rajapaksa lead opposition parties has decided to postpone the no-confidence motion against Srilanka Prime Minister Ranil Wickremesinghe.