For Daily Alerts
Just In
பிரபல சிங்களப் பாடகி கொலை- கணவர் கைது
இலங்கையின் பிரபல சிங்களப் பாடகி பிரியாணி ஜயசிங்க அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்ததாகத் தெரிவித்த போலீசார், பாடகியின் கணவரை சந்தேகத்தில் கைதுசெய்துள்ளதாகக் கூறினர்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்தரிக்கோல்களையும் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- தாய்லாந்து குகை: 4 சிறுவர்கள் மீட்பு, மற்றவர்ளை மீட்க ஆயத்தமாகும் குழு
- 'மீனில் கலக்கப்படும் புற்று நோய் உண்டாக்கும் வேதிப் பொருள்’
- நடனமாடிய இரான் பெண் கைது: ஆதரவு தெரிவித்து தங்கள் நடன விடியோவை பகிரும் பெண்கள்
- அழியப்போகிறதா இந்த வாழைப்பழம்? - அதிர்ச்சி தரும் தகவல்
Comments
English summary
Popular Sinhalese singer Priyani Jayasinghe was stabbed to death with scissors at her home in Panadura.