For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஸ்டர் மகிந்த ராஜபக்சே.. தலைகீழா நின்னாலும் பிரதமர் பதவி உங்களுக்கு இல்லை: மைத்ரிபால திட்டவட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒருபோதும் பிரதமர் பதவியை தரவே முடியாது என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார். அவரை அதிபர் மைத்ரிபால கடுமையாக எதிர்த்து வருகிறார்.

Sirisena denies PM Post to Rajapaksa

இருந்தபோதும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் எனக்கே பிரதமர் பதவியை மைத்ரிபால கொடுப்பார் என்று நம்பிக் கொண்டு கருத்துகளை தெரிவித்து வருகிறார் மகிந்த ராஜபக்சே. இதற்கு ஆப்படிக்கும் வகையில் மகிந்த ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மைத்ரிபால சிறிசேன.

அதில் ஆளும் சுதந்திர கட்சி இடம்பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களைக் கைப்பற்றினால் அந்த அணியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் ஒருவருக்குத்தான் தர வேண்டும்; அதே நேரத்தில் சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் யாருக்குப் பிரதமர் பதவி என்பதை தானே தீர்மானிக்கும் அதிகாரமும் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் மகிந்த ராஜபக்சே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Srilanka President Sirisena has denied to give the PM post to former President Mahinda Rajapaksa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X