For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் ஜெயலலிதா.. இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புகழாரம்

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: மறைந்த ஜெயலலிதா, மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா நேற்று இரவு 11. 30 மணிக்கு காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி தமிழகம் மட்டும் அல்லாது இந்திய அளவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sri Lanka President Mythri Bala Sirisena Condolence message on Jayalalithaa Death

அண்டை நாடான தமிழகத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் உள்ள நாடு இலங்கை. அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா, ஜெயலலிதா மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

English summary
Sri Lanka President Mythri Bala Sirisena twitted Condolence message on Jayalalithaa Death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X