மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் ஜெயலலிதா.. இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புகழாரம்
இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொழும்பு: மறைந்த ஜெயலலிதா, மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா நேற்று இரவு 11. 30 மணிக்கு காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி தமிழகம் மட்டும் அல்லாது இந்திய அளவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான தமிழகத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் உள்ள நாடு இலங்கை. அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா, ஜெயலலிதா மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
Chief Minister Jayalalitha was a leader dearly loved by her people. I express my condolences to her loved ones and the people of Tamilnadu.
— Maithripala Sirisena (@MaithripalaS) 6 December 2016
அதில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர். அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.