For Daily Alerts
Just In
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தொடர்பு இல்லை: எம்.பி. சுமந்திரன்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவரான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை எம்.பி. சுமந்திரன் கூறியதாவது:
எங்களுக்கு விடுதலைப்புலிகளுடனோ, அவர்களது கொள்கைகளுடனோ எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம்.
நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதும் இல்லை, ஊக்குவிப்பதும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என்ற அச்சம் யாருக்கும் தேவையில்லை. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த சில கட்சிகள் செய்யும் முயற்சி.
ஆனாலும், அப்படி ஒரு நடவடிக்கை இருந்தாலும், அதனை மக்கள் அனுமதிக்கவும், ஆதரிக்கவும் மாட்டார்கள்.
இவ்வாறு சுமந்திரன் கூறினார்.
Comments
English summary
"We do not have any allegiance to the LTTE nor are we committed to their ideology. We stand up for the rights of the Tamil people but we are not in favour of terrorism nor do we encourage it and everyone knows this," Tamil National Alliance MP MA Sumanthiran said.
Story first published: Monday, April 20, 2015, 10:09 [IST]