கோத்தபாயவுக்கு எதிரான குடியுரிமை வழக்கு டிஸ்மிஸ்!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிரான குடியுரிமை வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இலங்கையில் நவம்பர் 16-ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவார் என்ன அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் கோத்தபாயவின் இலங்கஇ குடியுரிமைக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.
அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்சே 2005 தேர்தலில் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்தார். அப்போது அதிபர் தேர்தலில் இலங்கை குடிமகனாகவும் வாக்களித்தார். அமெரிக்கா குடியுரிமை ஆவணங்களை மறைத்து இலங்கை குடியுரிமை அடையாள அட்டைகளைப் பெற்றதை எதிர்த்தே சமூக ஆர்வலர்களால் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இவ்வழக்கில் இன்று மாலை 6 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், கோத்தபாயவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் கோத்தபாய ராஜபக்சே, அதிபர் தேர்தலில் போட்டியிட தடை எதுவும் இல்லை.