20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இலங்கை: 20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கொழும்பு: இலங்கையில் பெரிதும் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் இரண்டு உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் அரசியல் அமைப்பில் 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது இலங்கை அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வகை செய்கிறது. இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் எம்.பி. அந்நாட்டு உயர்நீதிமன்ற்த்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவரே ஆஜராகி வாதாடவுள்ளதாகவும் நீதிமன்ற கட்டடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை...தமிழக பாஜக நிர்மல் குமாரின் சட்டத்திற்கு எதிரான வீடியோ பதிவு!!
அத்துடன், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் வழக்கில் ஆஜராகின்றார். கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம்.தவம் ஆகியோருக்காக இந்த வழக்கில் அவர் வாதாடுவார்.