For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்களின் 42 படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பு.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படகுகள் வரும் 17ஆம் தேதி விடுவிக்கப்படும் என தெரிகிறது.

தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதுவரை தமிழக மீனவர்களின் ஏராளமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Srilankan court orders to release 42 boats of Tamil fisheries

இந்நிலையில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படகுகள் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்டதாகும்.

இந்த படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவை வரும் 17ஆம் தேதி விடுவிக்கப்படும் என தெரிகிறது.

English summary
Srilankan court orders to release 42 boats of Tamil fisheries. In the Basis of humanity the boats has been released court said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X