For Daily Alerts
Just In
தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது
Recommended Video
மீனவர்கள் விரட்டியடிப்பு! அத்துமீறும் இலங்கை கடற்படையினர்- வீடியோ
யாழ்ப்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தின் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே கோவிலம் கலங்கரை விளக்க கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்பது இலங்கை கடற்படை குற்றச்சாட்டு. அப்பகுதியில் ரோலர் படகுடன் மீனவர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகு தற்போது எலாரா நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Comments
English summary
Srilankan Navy apprehend 5 Indian fishermen from Jagathapattinam in Pudukkottai district.
Story first published: Thursday, September 19, 2019, 10:13 [IST]