இலங்கை எதிர்க்கட்சித் தலைவராகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன்!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்க் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 225. இவர்களில் 196 எம்.பி.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எஞ்சிய 26 பேர் நியமன எம்.பிக்கள். இலங்கையில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க மொத்தம் 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.
தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளது. ரணில் ஆட்சி அமைக்க 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருந்தால் எதிர்க்கட்சியாக சுதந்திர கட்சியும் மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராகவும் வாய்ப்பு இருந்திருக்கும்.
தற்போது அதிபர் சுதந்திர கட்சியோ, ரணிலுடன் இணைந்து தேசிய அரசு அமைக்க ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியும் ,சுதந்திர கட்சியும் ஆளும் கட்சிகளாகிவிட்டன.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியான 16 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயல்பாகவே பிரதான எதிர்க்கட்சியாகிவிடுகிறது. அதன் தலைவரான இரா. சம்பந்தன், இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராகிறார்.