For Daily Alerts
Just In
முஸ்லிம்கள் மீதான வன்முறை எதிரொலி: நுவரெலியாவுக்கான சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது!
இலங்கை நுவரெலியாவில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.
Recommended Video
கோணிப்பையில் பெண் சடலம் | நுவரெலியா சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது-வீடியோ
கொழும்பு: முஸ்லிம்கள் மீதான பவுத்த பிக்குகள் வன்முறையால் நுவரெலியாவுக்கான சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துவிட்டது.
இலங்கை கண்டியின் நுவரெலியா, குட்டி லண்டன் எனப் போற்றப்படும் காலநிலையைக் கொண்டது. இது சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்தது நுவரெலியா.
ஆனால் அண்மையில் பவுத்த பிக்குகள், முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் இலங்கை போர்க்களமானது. இலங்கையின் அவசர நிலை பிரகடனமும் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நுவரெலியா பிரதேசம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. தங்கும் விடுதிகள், பூங்காக்கள் நடமாட்டம் ஏதுமின்றி உள்ளன.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் வருகை 40% சரிந்து போகிறதாம். இது இலங்கை அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Srilanka's Nuwara Eliya season an expected drop of about 40% due to the recent violences.
Story first published: Wednesday, April 18, 2018, 14:44 [IST]