For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த முடியாது...: இலங்கை அமைச்சரின் திமிர் பேச்சு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Won't Stop Arrests of Indian Fishermen Despite Talks: Lanka
கொழும்பு: பேச்சுவார்த்தை நடந்தாலும், தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், செவ்வாய்கிழமையன்று 25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்பில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''இந்தியாவுக்கு சென்றபோது, சிறப்பான வசதிகளை அளித்து எங்களை நன்றாக கவனித்து கொண்டார்கள். எங்கள் குழுவின் முழுச் செலவையும் இந்தியா ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாடு விவகாரத்தில் மத்திய அரசு சுதந்திரமாக செயல்படுகிறது. எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இந்திய அரசு எங்களிடம் சொன்னதே இல்லை.

தமிழக மீனவர்களை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய தரப்பில் இருந்து எங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதற்கு நான், எங்கள் கடல் எல்லையில் நுழைய யாருக்கும் உரிமை இல்லை, பேச்சுவார்த்தைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம் என கூறிவிட்டேன்" என்று கூறினார்.

English summary
A day after 25 Indian fishermen were arrested, Sri Lanka today said no one had the right to enter its territorial waters, indicating that future arrests were possible despite recent talks to resolve the thorny issue.Fisheries Minister Rajitha Senaratne said, "There was a suggestion from some quarters that we should refrain from arresting. I told them (Indian side) talks have no link with our right to prevent illegal fishing."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X