'இங்க இந்தியில எழுதினா... அங்க தமிழ்ல எழுதனும்' பொன்.ராதாவை கலாய்த்த ராதாரவி - வீடியோ
தமிழ்நாட்டில் இருக்கும் மைல்கற்களில் இந்தியில் எழுதினல், வடநாட்டிலிருக்கும் மைல்கற்களில் தமிழில் எழுத வேண்டும் என திமுக பேச்சாளர் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராதாரவி, தமிழ்நாட்டில் மைல்கற்களில் இந்தியில் எழுதினால், வடஇந்தியாவின் மைல்கற்களில் தமிழில் எழுத வேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியிலும் ஊர் பெயர் எழுதப்பட்டுள்ளது. இது இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கும் முயற்சி என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய பொன்.ராதாகிருஷ்ணன், வடநாட்டிலிருந்து வருகிற பயணிகளுக்கும் லாரி ஓட்டுநர்களுக்கும் வசதியாக இருக்க இந்தியில் எழுதப்பட்டுள்ளது என பதிலளித்தார். மேலும், அது மத்திய அமைச்சராக திமுகவைச் சேர்ந்த டி.ஆர் பாலு இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என கூறிவந்தார்.
இந்நிலையில், திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் ராதாரவி தமிழ்நாட்டில் மைல்கற்களில் இந்தியில் எழுதினால், வடநாட்டு மைல்கற்களில் தமிழில் எழுத வேண்டும். அது வடநாட்டுக்கு வரும் தமிழர்களுக்கு பயணம் செய்ய எளிதாக இருக்கும் என கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் ஒரு காலத்திலும் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.