பெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது
Recommended Video
சிட்னி: உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த யோகா குருவான ஆனந்த் கிரி, ஆஸ்திரேலியாவில் சில்மிஷ வேலைகளில் ஈடுட்டதற்காக அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள கோயில் ஒன்றில், இளைய மடாதிபதியாக இருப்பவர் யோகா குரு ஆனந்த் கிரி. இவருக்கு வயது 38 ஆகிறது. மேலும் இவர் யோகா படிப்பில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆராய்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஆன்மிக படிப்பு ஒன்றை பயிலவும் ஆன்மீக சுற்றுலாவிற்காகவும் ஆனந்த் கிரி தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னும் இவர் அந்நாட்டிற்கு சென்ற போது, இரு வேறு சம்பவங்களில் பெண்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அதன் விவரம் பின்வருமாறு, கடந்த 2016-ம் ஆண்டில் ரூட்டி ஹில் என்னுமிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவரிடம், ஆனந்த் கிரி அநாகரிகமாகவும், தவறாகவும் நடந்து கொண்டுள்ளார்.
அடிச்சிகிட்டாங்க.. இப்போ ஒன்னாயிட்டாங்க.. மமதா-ராகுல் காந்தி திடீர் வெள்ளைக்கொடி.. பின்னணி இதுதான்
பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 34 வயது பெண் ஒருவரிடமும் ஆனந்த் கிரி பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இந்த இருவேறு சம்பவங்களிலும் ஆனந்த் கிரி மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
6 வார ஆன்மீக சுற்றுலாவாக தற்போது ஆஸ்திரேலியா சென்ற ஆனந்த் கிரியை. அந்நாட்டு போலீஸார் மேற்கண்ட புகார்களின் கீழ் கைது செய்துள்ளனர். விரைவில் அவர் இந்தியா திரும்ப இருந்த நிலையில், பாலியல் புகார்களின் கீழ் சுற்றி வளைத்து அந்நாட்டு காவல்துறை ஆனந்த் கிரியை கைது செய்துள்ளது.
ஸ்வாமி ஆனந்த் கிரியின் குரு மஹந்த் நரேந்திர கிரி இந்த கைது சம்பவத்தை உறுதிபடுத்தினார். கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் கிரி தனது முகநூல் பக்கத்தில், எப்படியாவது எந்த வகையிலாவது மற்றவர்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம். உலகம் சிறப்பாக மாற அது வழிவகுக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.