வீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் சீலிங்கில் இருந்து படுக்கையில் மலைப்பாம்பு தவறி விழுந்ததால் அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். படுக்கையில் மலை பாம்பு ஊறும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் வீட்டில் செல்ல நாய் அல்லது பூனை உங்கள் படுக்கை அறையில் ஒய்வு எடுப்பதை பார்த்தால் நீங்கள் ரொம்ப சாதாரணமான ஒரு விஷயமாக நினைச்சுகிட்டு போயிடுவீங்க.
ஆனால் அதே படுக்கை அறையில் ஒரு மலைப்பாம்பி ஒய்யாரமாக படுத்துக்கிட்டு சோம்பல் முறித்தால் என்ன செய்வீங்க.. அப்படியே ஷாக்காயிடுவீங்கள்ள..
அப்படி ஒரு சம்பவம் தான் ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வீட்டின் சீலிங்கில் உள்ள பல்ப் வைத்துள்ளார்கள் . அதன் மேல் வந்த மலைப்பாம்பு அப்படியே பொத்தென்று படுக்கையில் விழுந்தது.
நல்ல வேளையாக அப்போது படுக்கையில் யாரும் இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். சன் சைன் பாம்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து மலைப்பாம்பை அகற்றினர். அவர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.