For Daily Alerts
Just In
திருச்சி விமானநிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் வைத்து கடத்தப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி விமானநிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் வைத்து கடத்தப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து லேப்டாப் சார்ஜரில் வைத்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
திருச்சி விமானநிலையத்தில் நடந்த சோதனையில், கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பக்ரூதின் என்கிற பயணியிடம் இருந்து ஒரு கிலோ 350 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், பக்ரூதின் என்கிற அந்த பயணி தன்னிடம் இருந்த லேப்டாப் சார்ஜரில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 40 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் விமானநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
1.35 Kilogram Gold seized in Trichy Airport. Earlier Customs Officer seized gold from a passenger from Kolalampur worth 40 Lakhs.
Story first published: Sunday, March 4, 2018, 11:57 [IST]