For Daily Alerts
Just In
டார்ச் லைட்டில் வைத்து 1.5 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் பயணி பிடிபட்டார்
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணி கடத்திய 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் டார்ச் லைட்டில் வைத்து பயணி கடத்திய 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று காலை ஏர் ஏசியா விமானம் வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் வழக்கம் போல் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு பயணியின் டார்ச் லைட்டில் தங்கம் மறைத்து வைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ரூ.45 லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments
English summary
A passenger was on Thursday detained at the Trichy airport for allegedly carrying 1.5 of gold bars in his rectum, airport police said.
Story first published: Thursday, October 27, 2016, 9:32 [IST]