சேட்டு கடையில் பலே மோசடி.. 2 மாதமாக கிலோ கணக்கில் நகை திருடிய கும்பல்.. அதிரடி கைது
சென்னையில் 1 கிலோ நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
சென்னை: வேலை பார்த்து வந்த நகைக்கடையிலேயே, கிலோ கணக்கில் நகைகளை திருடிய 2 ஊழியர்களை பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்.
தி.நகர் சென்னையின் முக்கியமான வணிக பகுதி. இங்கு ஏராளமான நகைக்கடைகள், பாத்திரக் கடைகள், துணிக்கடைகள் உள்ளன. இதனால் சென்னை மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலிருந்தும் வியாபாரிகளும் பொதுமக்களும் வந்து செல்வர். பாண்டிபஜாரின் பெரும்பாலான கடைகளில் சிசிடிவி கேமரா, ரோந்து போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபட்டுள்ளனர். என்றாலும் கொள்ளை, வழிப்பறிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான்இருக்கிறது. இன்றும்கூட நகை ஒன்றில் கிலோ கணக்கில் தங்கம் மாயமாகி உள்ளது.
ஜிஎன் செட்டி ரோட்டில் உள்ளது ஜேஜே டைமண்ட்ஸ் என்ற நகைக்கடை. இதன் உரிமையாளர் ஷர்னிக் நாகர் என்பவர். இவர் கடந்த 2 மாதங்களின் நகைகள் இருப்பு குறித்து இன்று காலை கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்தார். அப்போது 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்க நகைகள் குறைவதை கண்டு திடுக்கிட்டார். இதனால் உடனடியாக பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அத்துடன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன்னிடம் வேலைக்கு சேர்ந்த நிர்மல், நிதிஷ் ஆகிய 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் போலீசார் வேலை பார்க்கும் நபர்களிடம் விசாரணையை நடத்தினர். அப்போது, 11 நெக்லஸ்கள், 9 கம்மல்கள், 1 செயினை தாங்கள்தான் திருடியதாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளதுடன், திருடிய நகைகளை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.