For Daily Alerts
Just In
திருச்செங்கோட்டில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி விபத்து.. 7ம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: திருச்செங்கோடு அருகே நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஒரு மாணவன் உயிரிழந்து இருக்கிறான்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாலை பள்ளி விட்டு மாணவர்கள் வரும்போது இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்து வந்த வண்டி ஓரமாக நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் 7ம் வகுப்பு மாணவன் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் 2 மாணவர்கள் படுகாயம் அடித்துள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Comments
English summary
1 student dies and 2 injuries in Namakkal car crash . The car which came at very speed has crashed into school students.
Story first published: Wednesday, February 14, 2018, 20:42 [IST]