பி.எஸ்.எல்.வி.39 ராக்கெட் தோல்விக்கு காரணம் ஒரு டன் கூடுதல் சுமை: இஸ்ரோ முன்னாள் இயக்குனர்
ஒரு டன் கூடுதல் சுமையால், பி.எஸ்.எல்.வி.39 ராக்கெட் தோல்வியை தழுவியதாக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: பி.எஸ்.எல்.வி.39 ராக்கெட் தோல்வியை தழுவியதற்குக் காரணம் ஒரு டன் கூடுதல் சுமையே என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எச் செயற்கைக்கோளுடன் கடந்த வியாழனன்று பி.எஸ்.எல்.வி. சி. 39 ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால் செயற்கை கோளை நிலை நிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டில் இருந்து வெப்பக் கவசம் பிரிந்து செல்லாததே தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
ஆனால் ராக்கெட் ஏவுதலின் இரண்டாம் நிலையின் போது, ஒரு டன் எடை அதிகமாக இருந்ததால் தான், வெப்பக் கவசம் பிரிந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டதாக இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
எடையைக் குறைத்திருந்தால் ராக்கெட்டின் வேகம் குறைக்கப்பட்டு, செயற்கைக்கோள் பிரிந்து புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.