For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் வரவழைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக பத்து கம்பெனிகள் மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் விரைவில் கண்டறியப்படும் என தெரிவித்தார்.

military

புகார்களின் அடிப்படையில் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட 415 தேர்தல் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சக்சேனா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் சார்பில் 138 நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரத்துக்காக அனுமதி பெற்றுள்ளதாகவும், இதில் திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

English summary
For election security 11 company paramiltary forces to be despatched to Nellai district, said dt SP Narendran Nair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X