For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திண்டுக்கல் அருகே பரிதாபம்.. வறுமையால் விற்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தை..!

வறுமை காரணமாக விற்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு காரணமாக இருந்த ஏஜென்ட்டுகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: வறுமை காரணமாக விற்கப்பட்ட ஆண் குழந்தை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு துணைபோனவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள கொம்பேறிபட்டியில் வசித்த வந்த தம்பதியினர் வறுமையின் காரணமாக தங்களது 10 மாதக் குழந்தை விற்றுள்ளனர். இந்தக் குழந்தையை விற்பதற்கு சென்பாயி மற்றும் வேலன் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

10 month old boy baby selling, rescued in Karur

இந்தத் தகவலை அறிந்த போலீசார் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர். அப்போது கரூர் அருகில் குழந்தை இருக்கிறது என்று தகவல் கிடைக்க, போலீசார் கரூர் விரைந்தனர். அங்கு விற்கப்பட்ட 10 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

குழந்தையை விற்பதற்கு துணை போன சென்பாயி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேலன் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

English summary
10 month old boy baby, who was sold for money was rescued in Karur by police, one arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X