For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Google Oneindia Tamil News

நாகை: தமிழக மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி சிறைபிடிப்பதையும் கைது செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது.

10 Tamilnadu fisherman arrested by the Srilankan navy

இந்நிலையில் நாகை மாவட்டத்தைத் சேர்ந்த மீனவர்கள் அதிகாலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லைத்தாண்டி வந்ததாக கூறி 10 மீனவர்களை கைது செய்தது.

அவர்கள் பருத்தித்துறை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றம் சாட்டியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
10 Tamilnadu fisherman arrested by the Srilankan navy. The arrested fishermans are from Nagai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X