For Daily Alerts
Just In
தமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி பேருந்துகள் இயங்காது.. 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி பேருந்துகள் இயங்காது என 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஏப்ரல் 5-ம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதுவம் போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக வணிகர்கள் கடையடைப்பு நடத்துமாறு விக்கிரமராஜாவிடம் ஸ்டாலின் ஆதரவு கேட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை மறுநாள் திமுக நடத்தும் போராட்டத்துக்கு 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஏப்ரல் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் நடைபெற்ற 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
10 transport unions announced that buses will not operate on April 5th in Tamil Nadu. 10 transport unions announce support for DMK protest on 5th April.
Story first published: Tuesday, April 3, 2018, 17:52 [IST]