ஊருக்கு போன நேரம் பார்த்து 100 சவரன் நகை.. வைரம்.. கொள்ளை… மர்ம நபர்கள் துணிகரம்.. சென்னை பரபரப்பு
சென்னை அம்பத்தூரில் 100 சவரன் நகை, வைரம், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அம்பத்தூரில் பகுதியில் 100 சவரன், 7 லட்சம் மதிப்பிலான வைரம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான கனரக தொழிற்சாலையின் கூடுதல் மேலாளராக பணிபுரியும் இவர், தனது குடும்பத்துடன் கோடை விடுமுறையைக் கொண்டாட வெளியூர் சென்றிருக்கிறார்.
வீட்டைப் பூட்டிக் கொண்டு ஊருக்கு சென்றுவிட்டதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து, 100 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர். மேலும், ரூ.7 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சந்திரன் வீட்டின் பூட்ட உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், போலீசாரிடம் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.