கச்சத்தீவு அருகே 1000 தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 1000 பேர் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர்.
288 விசைப்படகில் சென்ற 1000 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
கடந்த வாரம் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 33 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 33 மீனவர்கள் 5 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் எனவும், படகில் இருந்த மீனவர்களில் ஒருவர் நாகையில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை கைது செய்யுமாறு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்து 24 மணி நேரத்திற்குள் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதும், அடுத்த சில தினங்களில் இந்த மீனவர்கள் விரட்டியடிப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.