104 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
தமிழகம் முழுவதும் 104 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 104 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
சென்னை, நெல்லை, மதுரை, சேலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மத்திய மண்டலம் சி.பி.சி.ஐ.டி. பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் ரெயில்வே போலீசிலும் பணி புரிந்து வந்தனர்.
104 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிபுரிந்த இடங்களில் அல்லது அவர்கள் பணியாற்றிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் அவர்களுக்கான பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
சொர்ணலட்சுமி, பத்மா தேவி, சித்ரா, சுஜாதா, கீதா, மகாலட்சுமி, ஜெயசுதா, அகிலா, சுமதி, பொன் சித்ரா உள்ளிட்ட 10 பேர் சென்னையில் பணியாற்றி இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.