For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மீனவர்கள் 106 பேரையும் விடுதலை செய்த இலங்கை அரசு!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 106 மீனவர்களையும் விடுவித்துள்ளது அந்நாட்டு அரசு.

ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த 106 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது எல்லைதாண்டி வந்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

106 fishermen released from Lankan jail

பின்னர் இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார், வவுனியா, திரிகோணமலை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்தின. இதையடுத்து நல்லெண்ண அடிப்படையில் 106 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் பரிந்துரை செய்தது.

இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி 55 மீனவர்களும், 18 ஆம் தேதி 33 மீனவர்களும், 19 ஆம் தேதி 14 மீனவர்களும், நேற்று 4 மீனவர்களும் என 106 பேர் அந்தந்த பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Srilankan court released 106 TN fishermen finally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X