தேர்தல் நெருங்கும் நிலையில் 108 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி பதவி தந்த ஜெ. அரசு!
சென்னை: சட்டசபைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் 108 இன்ஸ்பெக்டர்களுக்கு திடீரென பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டது.
பதவி உயர்வு பெற்றோரில் சிலர் - தற்போதைய பதவியும், டிஎஸ்பியாக புதிய பதவியும்
சென்னை உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு (திருச்சி நகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்)
உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் நடேசன் (உளவுப்பிரிவு உதவி கமிஷனர்)
மெரீனா கடற்கரை இன்ஸ்பெக்டர் அரிக்குமார் (மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்)
எஸ்.ஆர்.எம்.சி. இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் (பூந்தமல்லி சிறப்பு காவல்படை உதவி கமாண்டன்ட்)
போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் சங்கர் (பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக துணை சூப்பிரண்ட்)
பாதுகாப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் (தாம்பரம் உதவி கமிஷனர்)
அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் (சென்னை நிலமோசடி தடுப்பு பிரிவு உதவி கமிஷனர்)
எண்ணூர் இன்ஸ்பெக்டர் சீதாராமன் (உளவுப்பிரிவு உதவி கமிஷனர்)
பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை (சென்னை வடபழனி உதவி கமிஷனர்)
யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் அழகேசன் (திருவொற்றியூர் உதவி கமிஷனர்)
அயனாவரம் இன்ஸ்பெக்டர் யுவராஜ் (துறைமுகம் உதவி கமிஷனர்).
பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் (சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்)
வட பழனி இன்ஸ்பெக்டர் பழனிசெல்வம் (சென்னை மேற்கு மதுவிலக்கு உதவி கமிஷனர்)
சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி (திருவல்லிக்கேணி உதவி கமிஷனர்).
ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் அர்னால்டு ஈஸ்டர் (சி.பி.சி.ஐ.டி. டிஎஸ்பி)
உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஜோசப் (சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்).