இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இதில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 187 பள்ளிகளில் படிக்கும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 769 பேர் மாணவர்கள். 10 ஆயிரத்து 972 பேர் மாணவியர்.
தமிழகம், புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் 571 பள்ளிகளை சேர்ந்த 51 ஆயிரத்து 658 மாணவ மாணவியர் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.
அவர்களில் 24 ஆயிரத்து 738 பேர் மாணவர்கள். 26 ஆயிரத்து 920 பேர் மாணவியர். சென்னை மாவட்டத்தில் 209 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க முதன்மைத் தேர்வர்கள், துறை அலுவலர்கள் 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
324 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 குழுக்களாக சென்னை மாவட்ட தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.