எங்க வீட்டில் 10வது வருட கொலு.. வாழ்த்துங்கள் வாசகர்களே!
Recommended Video
சென்னை: சென்னையிலிருந்து இன்னொரு கொலு கண்காட்சி. நமது வாசகர் சிவகாமி முருகன் அனுப்பியுள்ளார்.
நவராத்திரி என்றால் கொலு அலங்காரம்தான். ஒவ்வொரு நாளும் கொலு பூஜை களை கட்டும் வீடுகளில். நமது வாசகர் சிவகாமி முருகன் நமக்கு தனது வீட்டு கொலு காட்சியை புகைப்படங்களாக அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை எர்ணாவூர் தமிழ்நாடு மின்சார வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சிவகாமி முருகன் குடும்பத்தினர் 10வது வருடமாக கொலு வைத்து வருகின்றனராம்.
10வது வருட கொலு
இந்த கொலுவையும் வழக்கம் போல வித்தியாசப்படுத்தி, பிரமாதப்படுத்தியுள்ளனர். படத்தில் பார்த்தாலே தெரிகிறது, கொலு எத்தனை அழகாக இருக்கிறது என்பது.
சூப்பர் விளக்கலங்காரம்
விளக்கு அலங்காரம் டாப்பாக இருக்கிறது. மொத்த கொலுவுக்கும் இது தனி லுக் கொடுத்து விட்டது. ஒளிரும் கொலுவாவுகம் இது காட்சி தருகிறது. பார்ப்பவர்களை ஈர்க்கிறது இந்த விளக்கலங்காரம்.
2 அடுக்குகளில் சிலைகள்
மொத்தம் 2 அடுக்குகளில் பொம்மைகள் அழகுற வைக்கப்பட்டுள்ளன. முப்பெரும் தேவியர் முதல் மினி பார்க் வரை ஏகப்பட்ட பொம்மைகள். எல்லாமே அழகு, அழகு, பேரழகு.!
அழகு
அடைசலாக பொம்மைகளைக் குவித்து வைக்காமல், படு க்யூட்டாக, நீட்டாக அடுக்கி வைத்துள்ளனர். பாந்தமான கொலு காட்சியாக இது ஜொலிக்கிறது. பக்தியும், காட்சியுமாக உள்ள இந்த கொலுவுக்கு நமது வாழ்த்துகள். நவராத்திரிக்கும் சேர்த்து வாழ்த்துகள்!
[வந்துருச்சு நவராத்திரி.. கொலு வச்சாச்சா.. ஷேர் பண்ணுங்களேன் எங்களுடன்!]