For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: 12 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்!

காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    12 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்..வீடியோ

    சென்னை: காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான பனிமூட்டம் நிலவி வரகிறது. பகல் நேரங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

    இரவு நேரங்களில் கடுமையான குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் அண்மையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.

    நேற்று முதல் மழை

    நேற்று முதல் மழை

    இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.

    சென்னையில் நள்ளிரவில் மழை

    சென்னையில் நள்ளிரவில் மழை

    சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்தது. இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம், வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்திலும் மழை பெய்தது.

    மதுரையில் லேசான மழை

    மதுரையில் லேசான மழை

    இதேபோல் கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மதுரையிலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது.

    பெரும்பாலான மாவட்டங்களில்

    பெரும்பாலான மாவட்டங்களில்

    மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டி, கீழையூர், வெள்ளரிப்பட்டியிலும், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை, திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

    மழையால் மக்கள் மகிழ்ச்சி

    மழையால் மக்கள் மகிழ்ச்சி

    வடகிழக்கு பருவமழை முறையாக பெய்யாத நிலையில் தற்போதே பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்த திடீர் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மிதமான மழை பதிவு

    மிதமான மழை பதிவு

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    12 மாவட்டங்களில் மழை பெய்யும்

    12 மாவட்டங்களில் மழை பெய்யும்

    சென்னை, கோவை, நெல்லை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Chennai meteorological center says 12 districts of Tamilnadu will get rain due to low depression in the bay of bengal. Chennai and other districts getting rain from yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X