For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன துணிச்சல்!… சென்னை அருகே மீன்பிடித்த 12 இலங்கை மீனவர்கள்!!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய மீனவர்கள் தங்களது எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்களைக் கைது செய்கிறது இலங்கை. ஆனால் இலங்கையைச் சேர்ந்த 12 மீனவர்கள் இந்திய எல்லைக்குள் பல கடல் மைல்கள் தூரம் அத்துமீறி வந்து சென்னை அருகே மீன் பிடித்துக் கைதாகியுள்ளனர்.

12 Lankan fishermen nabbed near Chennai

சென்னை அருகே இந்தியக் கடல் எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து 105 கடல் மைல் தொலைவில் 2 படகுகளில் 12 இலங்கை மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இந்திய கடற்படையினர், 12 இலங்கை மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த மீனவர்கள் அனைவரும் சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னை வரைக்கும் இலங்கை மீனவர்கள் அத்துமீறி வந்து மீன் பிடித்துள்ள செயல் அதிர வைத்துள்ளது.

English summary
12 Lankan fishermen who were indulging in illegal fishing were nabbed by ICG near Chennai and handed over to the Chennai police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X