For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கும்பகோணம் அருகே 12 வயது சிறுவன் நரபலி: சூலத்தில் குத்தப்பட்டிருந்த உடலை மீட்டு போலீஸ் விசாரணை

கும்பகோணம் அருகே 12 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளான் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோவிலில் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூலத்தில் குத்தப்பட்டிருந்த உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணத்தை அடுத்த வீராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். 12 வயதான இந்த சிறுவன் நேற்று நீண்ட நேரமாகியும் இந்த சிறுவன் வீட்டிற்கு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் தேடிப்பார்த்துள்ளன.

12 year old boy killed for human sacrifice in Kumbakonam

இந்நிலையில் அங்குள்ள மனியாண்டவர் கோவிலில் உள்ள சூலத்தில் குத்தப்பட்ட நிலையில் சிறுவன் பிணமகா கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அலறி துடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோவில் சூலத்தில் சிறுவன் குத்தப்பட்டிருந்ததால் அவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் சூலத்தில் குத்தப்பட்டு சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
12-year-old boy has been killed for human sacrifice in a temple at Kumbakonam. This incident has caused a stir in the area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X