க்யூட்டான 120 நாய்கள்.. கிருஷ்ணகிரியில் பார்வையாளர்களை ஈர்த்த நாய்கள் கண்காட்சி
120 நாய்கள் பங்கேற்ற கண்காட்சியினை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Recommended Video
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாங்கனி திருவிழாவையொட்டி, கால்நடை துறை சார்பில், நடைபெற்ற நாய்கள் கண்காட்சியினை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இந்த நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில், டாபர்மேன், ஜெர்மன் செப்பர்ட், லேப்ராடு, சிப்பிப்பாறை, லேபர்டாக், கிரேடன், டேஸ், என்டி, பெமோரியன், லசாப்சோ, சைபீரியன் அஸ்கி, ரேட்வீலர் உட்பட பல்வேறு வகையைச் சேர்ந்த 120 நாய்கள் பங்கேற்றன. மொத்தமாக 16 வகையிலான நாய்கள் பங்கேற்றிருந்தன.
இக்கண்காட்சியில், பெங்களூரூ கால்நடைக் கல்லுாரி முதல்வர்(ஓய்வு) டாக்டர் எத்திராஜ் தலைமையில் 40 கால்நடை டாக்டர்கள் பங்கேற்று சிறந்த நாய்களை தேர்ந்தெடுத்தனர்.
இதில், நாய்களின் குணங்கள், முதலாளிக்கு கீழ்படிதல், நாய்களின் தன்மை, தோற்றம் போன்றவற்றை ஆய்வு செய்து ஒவ்வொரு இனத்திலும் முதல் இடத்தை பிடிக்கும் மூன்று நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நாய்கள் கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.