13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு... தமிழக அரசு அதிரடி!
தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குற்றப்புலனாய்வு எஸ்பியாக ஜி.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
சைலேந்திர பாபு, ஜாபர் சேட் உள்ளிட்ட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நேற்று அதிரடி இடமாற்றம் செய்தது. இந்நிலையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட உத்தரவு அறிக்கை,
ஜி.ஸ்டாலின் - சென்னை குற்ற புலனாய்வு எஸ்பியாக நியமனம்
டி.அசோக்குமார் - ராமநாதபுரம் கடலோ காவல்படை குழும எஸ்பியாக நியமனம்
ஆர்.பாண்டியராஜன் - ஈரோடு,சிறப்பு அதிரடி படை எஸ்பியாக நியமனம்
சி.சியமளா தேவி - சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமனம்
கிங்ஸ்லின் - சென்னை, நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம்
எஸ்.அரவிந்த் - சென்னை புலனாய்வு பிரிவு எஸ்பியாக நியமனம்
சக்திவேல் - திண்டுக்கல் எஸ்பியாக நியமனம்
சரவணன் - மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமனம்
அனில்குமார் கிரி - சென்னை ரயில்வே எஸ்பியாக நியமனம்
எம்.சுதாகர் - சென்னை அண்ணா நகர் துணை கமிஷனராக நியமனம்
கே.பெரோஸ்கான் அப்துல்லா - திருநெல்வேலி குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக நியமனம்
எம்.சத்ய பிரியா - சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை எஸ்பியாக நியமனம்.
அபினவ்குமார் - அரியலூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.