தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி.. ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகி இருப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகி இருப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை நீடித்த வன்முறையில் போலீசார், துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி என சகலத்தையும் பிரயோகப் படுத்தியது.
இதனால் மூன்றாவது நாளான இன்றும் தூத்துக்குடியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய கமாண்டோ படை மற்றும் அதிரடிப்படை வீரர்கள் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 83 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். வன்முறையில் 29 ஆண் காவலர்களும் , 10 பெண் காவலர்களும் காயமடைந்துள்ளனர். இவ்வாறு சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.