14 வயது மல்யுத்த மாணவி மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம்.. தூத்துக்குடியில் பரபரப்பு
மல்யுத்த மாணவி மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இதனால் தூத்துக்குடியில் பரபரபப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மல்யுத்த போட்டியின் போது மைதானத்தில் மயங்கி விழுந்து 14 வயதான மல்யுத்த வீராங்கனையான மாணவி மாரீஸ்வரி மரணம் அடைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. 14 வயதான இவர் மல்யுத்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அரசுப் பள்ளியில் படித்து வரும் இவர் பள்ளிக் கூட அளவில் நடைபெறும் மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் மல்யுத்தப் போட்டி மைதானம் ஒன்றில் நடைபெற்றுள்ளது. இதில் மாரீஸ்வரி கலந்து கொண்டார். பின்னர், மதிய உணவு இடைவேளை நேரத்தில் திடீரென அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
உடன் இருந்த அனைவரும் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். 14 வயதே ஆன, எதிர்காலத்தில் இன்னும் நிறைய சாதிக்க இருந்த மல்யுத்த வீராங்கினையின் திடீர் மரணம் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.