For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவில் வழிபாட்டிற்கு இரு தரப்பினர் மோதல் - அரியலூர் மாவட்டம் சிலம்பூரில் 144 தடை
அரியலுார் : அரியலூரில் இரு தரப்பினரிக்கிடையேயான மோதலால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூரில் கோவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மோதல் வலுத்ததால் அங்கு வன்முறைகளைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை கோட்டாச்சியர் ராஜகோபால் வெளியிட்டுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும்வரை தடை உத்தரவு நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் அவர். பாதுகாப்பிற்காக சிலம்பூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
Ariyalur district village under 144 act, due to riot between two community people for temple.